தேடித் தேடி | ஸ்ரீவித்யா பசுபதி.

| Photo by Katerina Kerdi on Unsplash |

தேடித் தேடித் தொலைகின்றோம்

தேவை தீர்க்கத் தேடுகின்றோம்

தேடுதலே வாழ்க்கை என்கின்றோம்

தேடிப் பொருள் சேர்க்கின்றோம்

தேவைகள் தீராததால் சோர்ந்து

தேடலின் அர்த்தம் உணர்கின்றோம்

தேகம் துவண்ட வயதில் - நிம்மதி

தேடும் மனதில் - கடந்த காலமும்

எதிர்காலமும் குழம்பிக் கிடக்க

நிகழ்காலமும் தொலைத்து

தேடுதலை மீண்டும் தொடர்கின்றோம்.


- ஸ்ரீவித்யா பசுபதி, சென்னை. 

Post a Comment

0Comments
Post a Comment (0)