வெற்றியின் மந்திரம். | மைதிலி ராமையா.


புகழ் வேண்டும், பொருள் வேண்டும்

பூலோகமே தன் கையில் வேண்டும்



அகம் நிறைய மகிழ்ச்சி வேண்டும்

அனுதினமும் வெற்றி வேண்டும்



நினைத்ததெல்லாம் நடக்க வேண்டும்

நிம்மதி என்றும் உடனிருக்க வேண்டும்



அனைத்து மனிதர்களும்-நம்மை

அண்ணாந்து பார்க்கும்படி-பெரும் 



உயரம் தொட வேண்டும்-ஆயின்

உழைக்க மட்டும் இயலாது-பிறர்



வியக்க வாழ வேண்டும்-ஆயின்

வியர்வை சிந்தக் கூடாது-என



குறுகிய எண்ணம் கொண்டு 

குவலயம் வெல்லும் எண்ணம்



ஒருவருக்குள் உதித்து விட்டால்

வெற்றி என்றும் எட்டாக் கனியே. 



- மைதிலி ராமையா,, 

Post a Comment

0Comments
Post a Comment (0)