புகழ் வேண்டும், பொருள் வேண்டும்
பூலோகமே தன் கையில் வேண்டும்
அகம் நிறைய மகிழ்ச்சி வேண்டும்
அனுதினமும் வெற்றி வேண்டும்
நினைத்ததெல்லாம் நடக்க வேண்டும்
நிம்மதி என்றும் உடனிருக்க வேண்டும்
அனைத்து மனிதர்களும்-நம்மை
அண்ணாந்து பார்க்கும்படி-பெரும்
உயரம் தொட வேண்டும்-ஆயின்
உழைக்க மட்டும் இயலாது-பிறர்
வியக்க வாழ வேண்டும்-ஆயின்
வியர்வை சிந்தக் கூடாது-என
குறுகிய எண்ணம் கொண்டு
குவலயம் வெல்லும் எண்ணம்
ஒருவருக்குள் உதித்து விட்டால்
வெற்றி என்றும் எட்டாக் கனியே.
- மைதிலி ராமையா,,