உலக பட்டினி தினம்: ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு இரவு உணவு வழங்கிய அகில இந்திய மக்கள் நல கழகம்.


ஊத்தங்கரை, மே 30, 2026 (வைகாசி 16):
 


உலக பட்டினி தினத்தை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு அகில இந்திய மக்கள் நல கழகம் சார்பில் இரவு உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன.


இந்த சமூகநலப் பணியானது அகில இந்திய மக்கள் நல கழகத்தின் மாநிலத் தலைவர் டாக்டர் பி. சிவக்குமார் (வழக்கறிஞர்), மாநில துணைத் தலைவர் டாக்டர் பி. சதீஷ் (வழக்கறிஞர்) மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவர் டாக்டர் எல். கோபால்ரெட்டி ஆகியோரின் ஆலோசனையின் பேரில் நடைபெற்றது.


நிகழ்வில் கிருஷ்ணகிரி மாவட்ட ஐ.டி. விங் தலைவி திருமதி எஸ். வித்யா, மாவட்ட ஐ.டி. விங் துணைத் தலைவி திருமதி எம். பத்மபிரியா, மாவட்ட ஐ.டி. விங் செயலாளர் திரு. மாதவன் மற்றும் கழக உறுப்பினர்கள் கலந்துகொண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளுக்கு இரவு உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்களை வழங்கினர்.


உலக பட்டினி தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த மனிதநேயச் சேவை பொதுமக்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தின் பாராட்டைப் பெற்றது. சமூக அக்கறையுடன் இதுபோன்ற நலத்திட்டப் பணிகளை தொடர்ந்து முன்னெடுக்க அகில இந்திய மக்கள் நல கழகம் உறுதி எடுத்துள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். 

Post a Comment

0Comments
Post a Comment (0)