"அப்பா... என்னப்பா இதெல்லாம்? அண்ணணுக்கு பொண்ணு பார்க்கத்தான வந்திருக்கோம். என்னமோ கல்யாணம் முடிக்க வந்திருக்க மாதிரி இவ்வளவு கூட்டம் இருக்கு" என்று தன் தந்தையின் காதோரம் சென்று முணுமுணுத்தாள்.
"இங்க கிராமத்தில் ஒரு வீட்டுல ஏதாவது விஷேம்னா மொத்த கிராமமும் ஒன்னு கூடறது வழக்கம் தான் நித்யா."
"ஒன்னும் சொல்லுறதுக்கில்ல..." என்று கூறியவள் அங்கு வந்திருந்த அனைவரையும் நோட்டம் விட்டாள்.
"ஏய் பாட்டி... சும்மா கெட... அது ஒன்னும் ஆப்ரேஷன் செஞ்சா போடற கருப்பு கண்ணாடி கிடையாது. பட்டணத்துல இருக்கறவங்க சில பேரு பெரும்பாலும் வெயிலு கண்ணுல பட்டு கூசக் கூடாதுனு போடறது..."
"பட்டணத்துல எல்லாம் அப்படி தான் பாட்டி. நீ செத்த நேரம் அமைதியா இரு. மாப்பிள வீட்டுகாரவுங்க காதுல எதுவும் விழுந்தற போது..." என்று இன்பாவின் பெரியப்பா மகள் தமிழினி கூறிக் கொண்டிருந்தாள்.
"ஏன் இன்பா இப்படி பேசறவ?"
"நீ கல்யாணம் முடிச்சு போன, உனக்கு உன் வீட்டுல எல்லாம் உரிமையும் கிடைக்குதா? கல்யாணம் முடிஞ்சப் பிறக பெத்த ஆத்தா, அப்பன் வீட்டுக்கு வரனும்னாலும் உன் வீட்டுக்காரர் உத்தரவு கொடுத்தா தான இங்க வர முடியும்."
இந்த சம்பந்தம் ஒத்துப் போய் ஒரு வேளை எனக்கு கல்யாணம் முடிஞ்சாலும், அது ஒன்னும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த போறதில்ல. செய்தில சொல்வாங்கள, கைதீங்கள ஒரு சிறையில இருந்து வேறொரு சிறையில கொண்டு போய் அடைச்சுப் போடுவாங்கள... அந்த மாதிரி தான் இதுவும்.
பிறந்த வீட்டு சிறை வாழ்க்கையில இருந்து புகுந்த வீட்டு சிறை வாழ்க்கைக்கு மாத்துறது" என்று இன்பா கூறுவதைக் கேட்டதும், தமிழினியிமிருந்து எந்தவிதமான ஆதரவான வார்த்தைகளைக் கூறி அவளைச் சமாதனப்படுத்த முடியாமல், இன்பாவின் நிதர்சனமானப் பேச்சை நினைத்து வாயடைத்து அமைதியாகிவிட்டாள்.
தொடரும்...