உனது தேநீர் குவளையும் நானும்.. | கவிஞர். நீலாம்பரி


அன்று நீ ஊட்டி விட்டு சென்ற
அதே தேநீர் கோப்பை தான்
கேலி பேசுகிறது
அவனை காணோம் என்று...
ஈர சுவடுகள் காயுமுன்
நினைவுகளாகி விட்ட நிழல்கள்...
தொட்டு தொட்டு தீர்க்கிறது
நீ அணைத்தபடி பருகிய
அத்தனையும்...
கடைசி சொட்டு தேநீர்
கசக்குமோ என்று நீ
விட்டு சென்றதைத் தான்
இன்றும் ருசித்துக்
கொண்டிருக்கிறேன்...
புதுப்பித்த கோப்பைகள்
புத்துணர்வாய் காத்திருக்கு
வாசலில் விழி வைத்தபடி
அவன் வரவிற்காக...


பா. நீலாம்பரி 

Post a Comment

0Comments
Post a Comment (0)