பௌர்ணமி நிலா | கவிஞர் சிவ யசோதாமணி,


பௌர்ணமி நிலா

இயற்கையின் உலா

விண்ணில் தவழும் மேகங்கள்

நட்சத்திர கூட்டங்கள்

கரையை தேடும் அலைகள்

தென்றல் தரும் முத்தங்கள்


மின்மினி பூச்சிகளின்...

கண்ணாமூச்சி விளையாட்டுகள்...

கூவும் குயில்கள்

தலையசைக்கும் மரங்கள்,

கண்கொள்ளா காட்சிகள்...


இவளின்...

காத்திருக்கும் கண்கள்..

நிலவை மறுத்த மனம்...

தென்றல் மறுத்த குணம்

மின்மினியின் கண்ணாமூச்சி

காண மறுத்த கணம்...


இவளின்...

இதயமோ கனத்தது...

விடியலைத் தேடி....


- கவிஞர் சிவ யசோதாமணி

Post a Comment

0Comments
Post a Comment (0)