காத்திருப்பு.. | கவிஞர் நீலாம்பரி.


எப்போது வருவாய்

என்று மட்டும் கூறிவிடு...

காத்திருப்பு என்பதெல்லாம்
பெருஞ்சூறாவளியில்
கொந்தளிக்கும் கடலில்...
கை வலிக்க வலிக்க
காதல் படகைச்
செலுத்துவது போலிருக்கிறது...

எப்போது வருகிறேன்
என்ற செய்தி மட்டும் அனுப்புவிடு...
கரை அருகில் தான் என்றே
கொந்தளிக்கும் மனதை
அமைதிப் படுத்திக் கொள்கிறேன்...


பா. நீலாம்பரி 

Post a Comment

0Comments
Post a Comment (0)