என் வீட்டு வாசலும், நானும்... | பா. நீலாம்பரி


அழகா கோலம் போட்டா
அழகான புருஷன் கிடைப்பான்னு
அழகம்மா பாட்டி அடிக்கடி சொல்லும்...

"அவ போடாட்டி என்ன அம்மாயி"
நான் மாப்பிள்ளையா வந்தா
நானே போட்டுட்டு போறேன்னு"
அத்தான் கேலி பேசிச் சிரிப்பாக...

அவன் கை பிடித்து...
மாக்கோலம் போட
சொல்லி தரவே காத்திருந்தது,
என் வீட்டு வாசலும், நானும்...

"ம்ம்ம்...நடக்கட்டும், நடக்கட்டும்"
பரிசம் மட்டும் தான் போட்டிருக்கோம்...
அங்கலாய்த்த படியே சென்றாள்
அழகம்மா பாட்டி...

அத்தானோ சிரித்துக்கொண்டே
கோலம் போட்டார்...
"பரிசம் போட்டாலே
பாதி மாப்பிள்ளை தானே அம்மாயி"...


- பா. நீலாம்பரி

 

Post a Comment

0Comments
Post a Comment (0)