காலடி | கவிஞர். நீலாம்பரி


பாதம் பதித்த கரைகள்
பதமாய் அவனை வினவுகின்றன...
அவன் மேல் ஒட்டிக்கொண்டு
உதிர்ந்த மணல் துகளோ
காதலுடன் விசாரிக்கின்றன...

அலையுடன் துள்ளி குதித்த
அயிரைகள் பெருமூச்செரிந்தன
அவனில்லையாவென...

குழந்தைகளுடன் அவன் கட்டிய
மணல் கூடுகள் எல்லாம்
வாட்டத்துடனே கலைகிறது
வாசமிக்கவன் வருகை தராததால்...

தாண்டி செல்லும்
நத்தைகளும் நண்டுகளும் அவன்
நலம் கேட்டு விடை பெற...

தனியே வந்துவிட்ட என்னை
அவன் தேடுவானா இல்லையா???
கடலை சல்லடையாய் சலித்து
விடை தேடும் மனமே...

தேடினால் என் காதல்
கிடைக்கக் கூடும்
அவன் காலடியில்...

#அன்பின்விதை 

Post a Comment

0Comments
Post a Comment (0)